
இந்தியப் பெண் பத்திரிகையாளர் ராணா அய்யூப் நீதிமன்ற துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடி கொடுத்த இந்தியா, சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என தெரிவித்துள்ளது. ராணா அய்யூப் தெஹல்கா இதழில் பத்திரிகையாளராக இருந்தார். டெஹல்டா ஆசிரியர் தருண் தேஜ்பால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை அடுத்து அய்யூப் அங்கிருந்து ராஜினாமா செய்தார். அதன்பிறகு, சுதந்திர இதழியல் மூலம் பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார். இந்த நிலையில் பணமோசடி வழக்கில், வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ராணா அய்யூப்பின் 1.77 கோடி ரூபாயை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்தது. இந்த விவகாரத்தை அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வருகிறது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை குரல் எழுப்பியுள்ளது. ராணா அய்யூப் நீதிமன்றத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக ஐ.நா. பத்திரிக்கையாளர் ராணா அய்யூப்புக்கு எதிரான நீதித் துன்புறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா ஜெனிவாவின் ட்விட்டர் ட்வீட் செய்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையிடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா, சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என ஐக்கிய நாடுகள் சபையிடம் தெளிவாக கூறியது. தவறான செய்தியைப் பரப்புவது ஐக்கிய நாடுகள் சபையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் இந்தியா கூறியது. இதுக்குறித்த ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டரில், நீதித்துறை துன்புறுத்தல் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் தேவையற்றவை. இந்தியா சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துகிறது, ஆனால் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தெளிவாக உள்ளது" என்று பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக விகாஸ் சாங்க்ரித்யாயன் என்ற நபர் உத்தரபிரதேச காவல்துறையில் ராணா அய்யூப் மீது புகார் அளித்திருந்தார்.
சில கிழக்கு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதற்காக ராணா அய்யூப் நன்கொடை திரட்டியதாகவும் ராணா அய்யூப் இதுவரை 2,69,44,680 தொகையை திரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டு அவரது சகோதரி, தந்தையின் வங்கி கணக்குகளுக்கு போடப்பட்டுள்ளது என்று கூறி காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் காவல் நிலையத்தில் ராணா அய்யூப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 2021 முதல் அமலாக்க இயக்குநரகம் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது. அதன் கூற்றுப்படி, அறக்கட்டளையின் பெயரில் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிட்டு முறையாக பணம் திரட்டப்பட்டது என்றும் எந்த நோக்கத்திற்காக பணம் திரட்டப்பட்டதோ அது சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் பணத்தை நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தாமல், ராணா அய்யூப் தனியாக நடப்பு வங்கிக் கணக்கைத் திறந்து இந்தத் தொகையை அதில் போட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் குற்றம் சாட்டிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.