இஸ்லாமிய வங்கி தொடங்க அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதில்லை என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதில்:
பரந்து விரிந்த அளவிலும், நாட்டில் அனைவருக்கும் வங்கி மற்றும் நிதி சேவையை பெறுவதில் சம வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு, இஸ்லாமிய வங்கி தொடங்க அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான நிதி சீர்சீர்திருத்த குழு, இஸ்லாமிய வங்கி தொடங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.