Latest Videos

புது தில்லி.. 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது - சபாநாயகர் வெளியிட்ட அறிக்கை!

By Ansgar RFirst Published Jul 2, 2024, 9:21 PM IST
Highlights

Lok Sabha : புது தில்லியில் கடந்த ஜூன் 24, 2024 அன்று தொடங்கிய 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஜூலை 2ம் தேதி நிறைவடைந்தது.

கடந்த ஜூன் 26, 2024 அன்று நடைபெற்ற மக்களவையின் சபாநாயகர் தேர்தலைக் குறிப்பிட்டு பேசிய ஸ்ரீ பிர்லா, குரல் வாக்கெடுப்பு மூலம் தன்னை இரண்டாவது முறையாக சபாநாயகராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும் அன்றைய தினமே, சபைக்கு அமைச்சர்கள் குழுவை பிரதமர் அறிமுகப்படுத்தினார் என்றும் ஸ்ரீ பிர்லா தெரிவித்தார். 

2024 ஜூன் 27 அன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 18 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும், அந்த விவாதத்தில் 68 உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் ஸ்ரீ பிர்லா சபைக்கு தெரிவித்தார். மேலும், 25 உறுப்பினர்கள் தங்கள் உரையை நிகழ்த்தினர் என்றும், ஜூலை 2, 2024 அன்று பிரதமரின் பதிலுடன் விவாதம் முடிந்தது என்றும் அவர் கூறினார்.

நீதி வேண்டும்! மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள்.. பதில் அளித்த பிரதமர் மோடி.. என்ன பேசினார்?

மேலும் அன்றைய தினமே ராகுல் காந்தி மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார் என்று அவர் மேலும் தெரிவித்தார். விதி 377ன் கீழ் மொத்தம் 41 விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், 73 ஏ வழிகாட்டுதலின் கீழ் 03 அறிக்கைகள் செய்யப்பட்டன என்றும், இது தவிர, இந்த அமர்வின் போது 338 ஆவணங்கள் போடப்பட்டன என்று ஸ்ரீ பிர்லா தெரிவித்தார். 

உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் மற்றும் சபாநாயகர் தேர்தலின் போது நடவடிக்கைகள் சுமூகமாக நடந்ததற்காக இடைக்கால சபாநாயகர் ஸ்ரீ பர்த்ருஹரி மஹ்தாப் அவர்களுக்கு ஸ்ரீ பிர்லா நன்றி தெரிவித்தார். சபையை சுமூகமாக நடத்துவதற்கு பங்களித்த பிரதமர், நாடாளுமன்ற விவகார அமைச்சர், கட்சித் தலைவர்கள் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். 

ராகுல் காந்திக்கு புதுச் சிக்கல்! அபய முத்திரை பேச்சுக்கு விளக்கம் கேட்கும் மதத் தலைவர்கள்!

click me!