
ரூபாய் நோட்டு தடை செய்த பிறகு, கடந்த 26ம் தேதி நாசிக் மற்றும் தேவாஸ் நோட்டு அச்சடிக்கும் மையங்களில், 3.75 கோடிக்கு, புதிய நோட்டுகள் அச்சடித்து சாதனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மையத்தில் ரூ.2.05 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. மத்திய பிரதேச மாநிலம், தேவாஸ் மையத்தில் ரூ.1.70 கோடி புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
அச்சடிக்கப்பட்ட, 3.75 கோடி புதிய ரூபாய் நோட்டுகளில், 2.65கோடி நோட்டுகள் புதிய ரூ.500 நோட்டுகள் ஆகும். மற்றவை ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகள் ஆகும்.
கடந்த டிசம்பர், 23ம் தேதி ரூ.3.3 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அதில், நாசிக் மையத்தில் ரூ.1.9 கோடி நோட்டுகளும், மத்திய பிரதேசத்தில் உள்ள மையத்தில் ரூ.1.4 கோடி நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.