கேரளாவில் வெள்ளம் வரும் நீங்கள் அழிவீர்கள்! ஒரு மாதத்திற்கு முன்பாகவே எச்சரித்த மர்ம நபர்!

By Maruthu Pandi SanthosamFirst Published Aug 20, 2018, 11:35 AM IST
Highlights

கேரளாவில் வெள்ளம் வந்து பல்வேறு பாதிப்புகளை உருவாக்கியுள்ள இந்த நேரத்தில் ஒரு பித்து பிடித்த மனிதர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல லட்சம் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். 300 க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது இந்த கேரள வெள்ளம். கேரளாவில் வெள்ளம் வந்து பல்வேறு பாதிப்புகளை உருவாக்கியுள்ள இந்த நேரத்தில் ஒரு பித்து பிடித்த மனிதர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கடந்த 20 நாட்களாக வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது கேரள மாநிலம்.  இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த மழை தொடர்ந்து நீடித்து வருவதால் கேரளாவில் நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது போன்ற பேரிடர்கள் பல இடங்களில் நடந்து உள்ளது. 

1924 ஆம் ஆண்டுக்கு பிறகு, கேரளா எதிர்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய வெள்ள பேரிடர் இது.   கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளத்தைக் கேரளா சந்தித்துள்ளது. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. 324 பேர் பலியாகியுள்ளனர். 223139 மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5.91 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள், தோட்டங்கள், சுமார் 1,513 ஹெக்டர் அளவிலான விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. 

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கேரளாவை சேர்ந்த ஒரு பித்து பிடித்த நிலையில் உள்ள மனிதர் நடந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே விளக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் அந்த மனிதர் மலையாளத்தில் பேசுகின்றார். அவர் பேசிய மலையாளத்தின் தமிழ் பதிவு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

"நேரம் இல்லை யாருக்கும் நேரம் இல்லை.ஒன்றுக்கும் நேரம் இல்லை. எல்லாரும் தேடலில். பணத்தை தேடுகிறார்கள். பணத்தை அடுக்கடுக்காய் சேகரித்து இதுபோன்ற மாளிகைகளை உருவாக்கி அதின் உள்ளே வைத்துக்கொள். அந்த கட்டுகள் வெடித்து வெள்ளங்கள் வரும். வெள்ளத்தில் மரண பாய்ச்சல்கள் வரும். அதில் எல்லாரும் அழிவீர்கள். நீயும் அழிவாய் உன் குடும்பத்தாரும் அழிவார்கள். உன் நாட்டுக்காரர்களும் அழிவார்கள். நீ உண்டாக்கி வைத்த சகல சொத்துக்களும் அந்த வெள்ளத்தின் அடியில்(சேற்றில்) அழியும். அதின் முன் இதை தடை செய்ய பார். ஏதாவது செய். முஸ்லீமும் மரிப்பான். இந்துவும் மரிப்பான். கிறிஸ்தவனும் மரிப்பான். ஏழையும் மரிப்பான். பணம் இருப்பவனும் மரிப்பான். போய் தடை செய். இல்லாவிட்டால் ஒரு நாள் வெள்ளத்தில் லட்சக்கணக்கானோர் செத்து மிதந்து கிடப்பார்கள். போய் தடை செய். நேரம் இல்லை. ஒன்றுக்கும் நேரம் இல்லை."

இவ்வாறு இவர் பேசியது கேரளா மக்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பலவேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு ஆச்சர்யத்தையும் அதே நேரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றது.

click me!