
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து இன்று முதல் வங்கிகளில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த புதிய நோட்டுக்களை மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்,
500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்
மக்கள் வங்கிகளுக்கு சென்று புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், முதியவர்களுக்கு தன்னார்வலர்கள் புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்கி தரும் செயல் பராராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழலற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கொள்கை மக்களை சென்றடைந்துள்ளது. மத்திய அரசின் முடிவால் ஏற்படும் நன்மைகள் ஒவ்வொருவருக்கும் சென்று சேரும் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.