மிசோரம் தேர்தல் முடிவுகள்: மிசோ தேசிய முன்னணி முன்னிலை!

By Manikanda PrabuFirst Published Dec 4, 2023, 9:44 AM IST
Highlights

மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், மிசோரம் மாநிலம் தவிர மற்ற 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், தெலங்கானா தவிர மற்ற 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கவுள்ளது.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை மாநிலமான மிசோரம் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் முறையீட்டைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டது.

Latest Videos

அதன்படி, மொத்தம் 40 தொகுதிகளை மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, மிசோ தேசிய முன்னணி முன்னிலை வகித்து வருகிறது. மிசோ தேசிய முன்னணி 14 இடங்களிலும், ஜோரம் மக்கள் இயக்கம் 12 இடங்களிலும், பாஜக, காங்கிரஸ் தலா 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. முன்னதாக, ஜோரம் மக்கள் இயக்கம் முன்னிலை வகித்த நிலையில், தற்போது மிசோ தேசிய முன்னணி முன்னிலை வகித்து வருகிறது.

கொட்டித்தீர்க்கும் கன மழை... பெருங்களத்தூர் சாலையில் அசால்டாக கிராஸ் செய்த முதலை- ஒரு நொடியில் தப்பிய ஊழியர்

மிசோரம் பொறுத்தவரை மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. பாஜகவும் தனித்து உள்ளது. இருந்தாலும், 1987ஆம் ஆண்டு மிசோரம் மாநில அந்தஸ்து பெற்றது முதல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ் ஆகிய கட்சிகளே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. 

கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். இந்த முறை மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வந்தது.

click me!