மீ டூ மூவ்மெண்ட் ஒரு குப்பை… பாலியல் என்பது ஒரு கொடுக்கல் வாங்கல் அவ்வளவு தான்.. இதுக்கு போயி இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இறங்கி அடிக்கும் நடிகை ஷில்பா!!

By Selvanayagam PFirst Published Oct 13, 2018, 7:55 PM IST
Highlights

மீ டூ மூவ்மெண்ட் என்பது குப்பை போன்றது என்றும், இது ஒன்றுத் கற்பழிப்பு குற்றமில்டில எனறும் தெரிவித்துள்ள நடிகை ஷில்பா ஷிண்டே, இது ஒரு சாதாரண கொடுக்கல் வாங்கல் பிரச்சனைதான் என தெரிவித்துள்ளார்.

நடிகைகள் பாலியல் தொல்லைகளை வலைத்தள ‘மீ டூ’ இயக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். பிரபலமாக உள்ள பெரும் தலைகள் எல்லாம் இதில் உருளுகின்றன. 

பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நான படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகைகள் உட்பட சாதாரண பெண்கள், தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து தைரியமாக பேசி வருகின்றனர்.

பாலிவுட்டில் தொடர்ந்து இது போன்ற புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் மீ டூ இயக்கம் அர்த்தமற்றது.  இது கற்பழிப்பு குற்றமல்ல ஒரு  கொடுக்கல் வாங்கல் பாலிஸி தான் என டிவி நடிகை ஷில்பா ஷிண்டே கூறி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷில்பா ஷிண்டே இது குப்பை தான், நீங்கள் அந்த நேரத்தில் ஒரு அழைப்பை எடுத்துக் கொள்ள வேண்டும், அது எளிது, அந்த நேரத்தில் மட்டுமே  அது பற்றி  பேச வேண்டும்,  எனக்கு இது போன்ற ஒரு அனுபவம்  கிடைத்தது. நீங்கள் எப்போதாவது நடக்கும் போது, அந்த அழைப்பை எதிர்க்க வேண்டும். வெளிப்படையாக அதற்கு உங்களுக்கு சக்தி தேவை.

இந்த துறை மோசமானது அல்ல நல்ல துறை தான். எல்லா இடங்களிலும் இந்த விஷயங்கள் நடக்கின்றன.அனைவருமே ஏன் இந்த தொழில் துறையின்  பெயரை கெடுத்துக் கொள்கிறார்கள்எனதெரிவித்தார்.. யாரோ ஒருவர் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் மற்றும் யாரோ ஒருவருக்கு நீங்கள் எப்படி பிரதிபலிக்கிறீர்கள். இது முற்றிலும் ஒரு கொடுக்கல் வாங்கல் கொள்கைதான் என கூறினார்.

அதே சமயத்தில் நான் இந்தத் துறையில் எந்தவொரு கற்பழிப்பும் இல்லை என்று சொன்னேன். அது ஒரு பரஸ்பர புரிதல் தான். நீங்கள் அதை செய்யத் தயாராக இல்லை என்றால், அதை விட்டுவிடுங்கள என ஷில்பா ஷிண்டே தெரிவித்தார்.

click me!