
கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
நமது எதிரி நாடான பாகிஸ்தான் ஒருமுறை துப்பாக்கியால் சுட்டால், நாம் அவர்கள்மீது இரண்டுமுறை பதிலுக்கு தாக்குவதால் எல்லைப்பகுதியில் கடந்த மூன்றுநாட்களாக துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருக்கிறது. நாம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால் தாக்குதலை நிறுத்துமாறு நம்மிடம் அவர்கள் முறையிடுவதாக தெரிவித்தார்.
போர் நடத்த வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இல்லை. ஆனால், நமது நாட்டை யாராவது தீயப்பார்வையுடன் முறைத்துப் பார்த்தால், கண்களை தோண்டி எடுத்து, அவன் கையில் போடும் அளவுக்கான சக்தி நம்மிடம் உள்ளது என்றும், நமது படைகள் எந்த நேரத்திலும், எதையும் சமாளிக்க தயார்நிலையில் உள்ளன என்றும் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.