மகா கும்பமேளாவில் மீண்டும் விபத்து: செக்டார் 19ல் பயங்கர தீ விபத்து!

Published : Feb 15, 2025, 10:11 PM IST
மகா கும்பமேளாவில் மீண்டும் விபத்து: செக்டார் 19ல் பயங்கர தீ விபத்து!

சுருக்கம்

MahaKumbh Mela 2025 Fire Accident : பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் செக்டார் 19ல் இன்று மாலை மீண்டும் தீ பயங்கரமான விபத்து ஏற்பட்டது. கூடாரங்களை அகற்றும் போது ஏற்பட்ட தீ விபத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

MahaKumbh Mela 2025 Fire Accident : மகா கும்பமேளாவில் தீ விபத்து: மகா கும்பமேளாவில் சனிக்கிழமை மாலை செக்டார் 19ல் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, மேளாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. காவல் துறையும் நிலைமையை முழுமையாக கண்காணித்து வருகிறது. இருப்பினும், இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

மகா கும்பத்தில் தொலைந்த 20,000க்கும் மேற்பட்டோர் மீண்டும் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தனர்!

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் எப்படி தீப்பிடித்தது?

செய்திகளின்படி, மோரி சாலையில் அமைந்துள்ள லவ்குஷ் மகாராஜின் பந்தலில் பக்தர்கள் தங்கியிருந்தனர். இங்கு கூடாரங்களை அகற்றி, பொருட்களை எடுத்துச் செல்லும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தீப்பிழம்புகளும் புகையும் எழும்பி வருவதைப் பார்த்து அருகிலிருந்த பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.

2 நாட்களுக்கு முன்பும் தீ விபத்து ஏற்பட்டது

மகா கும்பமேளாவில் பிப்ரவரி 13ஆம் தேதியும் இரண்டு வெவ்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. செக்டார் 6ல் நாகவாசுகி அருகே பிந்து மாதவ் சாலையில் உள்ள காவல் நிலைய கூடாரத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 4 கூடாரங்கள் எரிந்து சாம்பலாயின, ஆனால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ரூ.3.5 லட்சம் கோடியில் லக்னோவை AI சிட்டியாக மாற்றும் யோகி ஆதித்யநாத் அரசின் திட்டம்!

தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி தொடர்கிறது

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சேத மதிப்பீட்டை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மகா கும்பமேளா போன்ற பெரிய நிகழ்வில் தொடர்ந்து ஏற்படும் தீ விபத்துகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நிர்வாகம் இப்போது மேலும் கடுமையான ஏற்பாடுகளைச் செய்யத் தயாராகி வருகிறது.

ரேஷன் முறையில் மாற்றம்! பணம் எல்லாருக்கும் கிடைக்குமா?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!