மஹா கும்பமேளா 2025; நைஜீரியா மக்களுக்கு விடுக்கப்பட்ட அன்பு அழைப்பு - அசத்திய பிரதமர் மோடி!

Ansgar R |  
Published : Nov 18, 2024, 08:21 PM IST
மஹா கும்பமேளா 2025; நைஜீரியா மக்களுக்கு விடுக்கப்பட்ட அன்பு அழைப்பு - அசத்திய பிரதமர் மோடி!

சுருக்கம்

மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள நைஜீரிய மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாகராஜில் மகா கும்பமேளா கலாச்சார விழாவாகக் கொண்டாடப்படும் ஒரு பொன்னான தருணம். மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான மக்கள் பிரயாகராஜுக்கு வருகிறார்கள். இது நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பேசப்படுகிறது. இது ஒரு அழகான அனுபவம், இதை மக்கள் எப்போதும் தங்கள் மனதில் நிறுத்திக் கொள்ளத் தயராக இருக்கிறார்கள். மகா கும்பமேளா அடுத்த ஆண்டு ஜனவரி 13 முதல் ஜனவரி 26, 2025 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த தருணத்தில் கலந்து கொள்ள நைஜீரிய நாட்டு மக்களை இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கான பயணத்தின் முதல் கட்டமாக நைஜீரியாவுக்குச் சென்றபோது இவ்வாறு அழைப்பு விடுத்தார். 

மேலும் உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்த அருமையான மஹா கும்பமேளாவில் பங்கேற்க நைஜீரிய மக்களை அன்போடு அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!