புவனேஸ்வர்: திருமணத்தின் போது மணப்பெண் வீட்டாரிடம் பணம், நகை மற்றும் வாகனம் போன்றவற்றை மணமகன் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்டு பெறுவது வாடிக்கையான ஒன்று. ஆனால் ஓடிசாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் 1001 மரக்கன்றுகளை மணமகளின் தந்தையிடம் வரதட்சணையாக கேட்டது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டம் பாலபத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் காந்த் பிஸ்வால் என்பவர் உள்ளூரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது திருமணத்துக்கு பெண் தேடினார். ஆனால் இறுதியில் அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ரேஷ்மி ரேகாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். அப்போது மணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். திருமணத்தின் போது ஆடம்பரமாக பூ அலங்காரம், பந்தல் அலங்காரம் தேவையில்லை என்பன போன்ற நிபந்தனைகள் வைத்தார். ஆனால் பிஸ்வால் கேட்ட வரதட்சணையை கேட்டு மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.