பிரபல பாம்பு பிடி மன்னனை கடித்த ‘நல்ல பாம்பு..’ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. வைரல் வீடியோ !

Published : Feb 01, 2022, 09:46 AM IST
பிரபல பாம்பு பிடி மன்னனை கடித்த ‘நல்ல பாம்பு..’ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. வைரல் வீடியோ !

சுருக்கம்

கேரளாவின் மிக பிரபலமான பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷை நல்லபாம்பு கொத்தியது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவர சுமார் 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை லாவகமாக பிடித்துள்ளார். 

கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேசுக்கு போன் தகவல் வந்தது. இதை தொடர்ந்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

பின்னர், குறிப்பிட்ட அந்த வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்ட முயன்றார்.  அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு வாவா சுரேசின் வலது காலில் கடித்தது. இதைகண்டு அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் வாவா சுரேஷ் மயக்கி விழுந்தார். அதைதொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர், அவரை மேல்சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வாவா சுரேஷ் உடல்நிலை குணமாக வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!