டிரெட்மில்லில் தடுக்கி விழுந்து பாடம் கற்றுக்கொண்ட ராஜீவ் சந்திரசேகர்! மக்களுக்கு ஒரு அட்வைஸ்!

Published : Oct 05, 2025, 08:53 PM IST
Rajeev Chandrasekhar

சுருக்கம்

கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்து காயமடைந்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதேசமயம், சபரிமலை விவகாரத்தில் ஆளும் சிபிஎம் கட்சி இந்து நம்பிக்கைகளுக்குத் துரோகம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது டிரெட்மில்லில் தவறி விழுந்து காயமடைந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதேசமயம், சபரிமலை விவகாரத்தில் ஆளும் சிபிஎம் கட்சிக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

டிரெட்மில்லில் தவறி விழுந்ததில் தனது முகத்தில் காயங்கள் ஏற்பட்ட புகைப்படத்தை இணைத்து ராஜீவ் சந்திரசேகர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

டிரெட்மில் கற்றுக் கொடுத்த பாடம்

ராஜீவ் சந்திரசேகர் தனது பதிவில், “வலியை அனுபவித்ததன் மூலம் இன்று ஒரு விஷயத்தை நான் கற்றுக்கொண்டேன். நீங்கள் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருக்கும்போது, தொலைபேசி அழைப்பை எடுக்க முயற்சி செய்தால், நீங்கள் வழுக்கி விழுந்து, முகத்தை காயப்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அது எனக்கே நடந்தது. அடிபட்ட சங்கடமான வலியும் காயம் என்னிடம் உள்ளன” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், டிரெட்மில்லில் தொலைபேசிகளை மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள்," எனவும் எச்சரித்துள்ளார்.

 

 

சபரிமலை விவகாரம்

இதேவேளையில், கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சி இந்து மத நம்பிக்கைக்கும், உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்துள்ளது என்று ராஜீவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "2018ஆம் ஆண்டில், சபரிமலைப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் அவர்கள் அழிக்க முயன்றார்கள். அதை எதிர்த்த ஐயப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்டதை நாம் பார்த்தோம். இப்போது, மக்களை ஏமாற்றுவதற்காக 'ஐயப்ப சங்கமம்' என்ற அமைப்பை அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சபரிமலை கோவிலில் இருந்து தங்கம் திருடப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இவையெல்லாம் நடந்திருக்கிறது," என்று கூறினார்.

மேலும், ஊழல் செய்வதில் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனிப்பட்ட விபத்து குறித்துப் பாடம் எடுத்த அதே நேரத்தில், அரசியல் ரீதியாக ஆளும் கட்சிக்கு எதிராக அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!