500 கிராமங்களுக்கு இலவச ‘வை-பை’ இணையதள வசதி - கர்நாடக அரசு  அதிரடி

 
Published : Nov 17, 2017, 09:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
500 கிராமங்களுக்கு இலவச ‘வை-பை’ இணையதள வசதி - கர்நாடக அரசு  அதிரடி

சுருக்கம்

Karnataka Government has launched a free Wi-Fi Internet facility for 500 villages in the state yesterday.

கர்நாடக மாநிலத்தில் 500 கிராமங்களுக்கு இலவச வை-பை இணையதள வசதியை நேற்று  முதல் முறைப்படி முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு தொடங்கி உள்ளது.

மொத்தம் 2600 கிராமங்களுக்கு இலவச வை-பை இணையதள வசதி செய்துதரப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து இருந்த நிலையில், முதல்கட்டமாக 500 கிராமங்களுக்கு வழங்கியுள்ளது.

பாரத்நெட் திட்டத்தின் மூலம் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மூலம், 90 சதவீத கிராமங்களுக்கு இலவச இணையதள வை-பை வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சோதனை முயற்சியாக 11 கிராமங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்திப் பார்க்கப்பட்டது. இது வெற்றி பெற்ற நிலையில், அனைத்து கிராமங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.

கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வை-பை இணையதள வசதி, அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிடைக்கும். கிராம மக்கள் முதல் 100 எம்.பி. க்கு அதிவேகத்தில் இணையதளத்தை பயன்படுத்தலாம் அதன்பின் வேகம் குறையும்.

இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துக்கு தலைமை இடமாக பெங்களூரு இருந்து வருகிறது. பயோடெக், தகவல் தொழில்நுட்பத்தில் பெங்களூரையும், கர்நாடக மாநிலத்தையும் உலகில் தலைசிறந்த இடமாக மாற்றுவது எனது கனவாகும். அதற்கான  பணியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!