திருமலையில் PSLV-C61 ராக்கெட் மாதிரியை காணிக்கை செலுத்திய இஸ்ரோ தலைவர்

Published : May 17, 2025, 11:09 AM IST
ISRO chairman V Narayanan

சுருக்கம்

இஸ்ரோ தலைவர் நாராயணன் திருமலையில் PSLV-C61 ராக்கெட் மாதிரியை காணிக்கையாக செலுத்தினார். EOS-09 செயற்கைக்கோள் மே 18, 2025 அன்று விண்ணில் ஏவப்படும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் நாராயணன் இன்று (மே 17) திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தார். PSLV-C61 ராக்கெட் மாதிரியை காணிக்கையாக செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்தார். இஸ்ரோ ஏற்கனவே 100 வெற்றிகரமான விண்ணில் ஏவுதல்களை செய்துள்ளது. தற்போதைய PSLV-C61, 101வது ஆகும். 

நாளை ஏவப்படும் EOS-09 செயற்கைக்கோள்

மே 18, 2025 அன்று, அதாவது நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ஏவுதல் நடைபெறும். இந்த திட்டத்தில் EOS-09 என்ற புதிய பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். இந்த செயற்கைக்கோள் வானிலை, பூமியின் மேற்பரப்பு மாற்றங்கள் மற்றும் விவசாய நிலைமைகள் குறித்த விரிவான தகவல்களை சேகரிக்கும்.

திருமலையில் இஸ்ரோ நிர்வாகிகள் சுவாமி தரிசனம்

EOS-09 செயற்கைக்கோள் இந்தியாவின் பூமி கண்காணிப்பு திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாயிகள், அரசு நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு உதவும். இஸ்ரோ தலைவருடன் மற்ற அதிகாரிகளும் திருமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் பூஜைகளுக்குப் பிறகு தேவஸ்தான நிர்வாகிகளை சந்தித்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!