அலர்ட்..! அதிகரிக்கும் கொரோனா.. 2 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் பாதிப்பு..

By Thanalakshmi VFirst Published Apr 18, 2022, 11:00 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 214 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 214 பேர் உயிரிழந்துள்ளனர்.நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2183 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதன்மூலம் நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,42,097 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்பு 5,21,965 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து இன்று ஒரே நாளில் 1,985 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை 4,25,10,773 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 11,542 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,66,459 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 2,61,440 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 2,183 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இன்று 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாட்டில் இதுவரை 186.54 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தில்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு சன்று அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 214 பேர் பலி... நான்காவது அலை தொடங்கிடுச்சா?

click me!