பரபரப்பு..! மீண்டும் அடுத்த அலையா..? வேகமெடுக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 2,067 பேர் பாதிப்பு..

Published : Apr 20, 2022, 12:49 PM IST
பரபரப்பு..! மீண்டும் அடுத்த அலையா..? வேகமெடுக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 2,067 பேர் பாதிப்பு..

சுருக்கம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,067 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 1247 பேருக்கு தொற்று பதிவான நிலையில், இன்று 2067 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,067 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 1247 பேருக்கு தொற்று பதிவான நிலையில், இன்று 2067 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,067 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,47,594 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 1,547 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...! முக கவசம் கட்டாயம்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் அவசர கடிதம்

இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,13,248 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பினால் 12,340 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,22,006 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 186.90 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,23,733 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சற்றுமுன் முக்கிய தகவல்..மீண்டும அதிகரிக்கும் கொரோனா..முக கவசத்திலிருந்து விலக்கு இல்லை.. அமைச்சர் பேட்டி..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?