காவி நிறம்! பச்சை நிறக் கோடுகள்! வித்தியாசமான தலைப்பாகை அணிந்து வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடி.!

By vinoth kumarFirst Published Aug 15, 2022, 7:58 AM IST
Highlights

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாச மான தலைப்பாகையை அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாச மான தலைப்பாகையை அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

 

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு செங்கோட்டையில் பிரதமர் மோடி 9வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் வித்தியாச மான தலைப்பாகையை அணிந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

பிரதமர் மோடி வெள்ளை நிற தலைப்பாகை அணிந்திருந்தார். அதில் காவி நிறம் மற்றும் பச்சை நிறக் கோடுகள் இருந்தன. பார்ப்பதற்கு தேசியக் கொடி உணர்வைத் தரும் வகையில் அந்த தலைப்பாகை அமைந்துள்ளது. வெளிர் நீல நிற கோட் அணிந்திருந்தார்.

 

click me!