"11.44 லட்சம் பான் கார்டுகள் அதிரடி முடக்கம்" - போலிகளை அடையாளம் கண்டது வருமான வரித்துறை!!

Asianet News Tamil  
Published : Aug 08, 2017, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
"11.44 லட்சம் பான் கார்டுகள் அதிரடி முடக்கம்" - போலிகளை அடையாளம் கண்டது வருமான வரித்துறை!!

சுருக்கம்

income tax dept ban 11 lakhs pan cards

ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட போலியான பான்  கார்டுகள் பயன்படுத்துவதை  கண்டுப்பிடித்த  வருமானவரித்துறையினர் அவற்றை அதிரடியாக  முடக்கியுள்ளது

ஆதார் எண்ணை கண்டிப்பாக பான் எண்ணுடன் இணைக்க  வேண்டும் என  மத்திய அரசு தெரிவித்து இருந்தது.இதன் மூலம் பல ஊழல்களை கண்டுப்பிடிக்க முடியும் என்பதாலும்,வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்படும் சொத்துக்களை முடக்குவதற்காகவும்,இன்னும் பல  குறிக்கோள்களுக்காக ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்த பிறகு, வருமானவரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ஒரே பெயரில், பொய்யான  விவரங்களை  கொடுத்து பெறப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வருமானவரித்துறையினர்  அதிரடியாக முடக்கி உள்ளனர்

மேலும் நாடு முழுவதும்  இதுவரை 11.44   லட்சம் போலியான பான் கார்டுகளை கண்டறிந்து முடக்கப்பட்டுள்ளது.

மேலும் நாம் பயன்படுத்தும் பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள  http://www.incometaxindiaefiling.gov.in  என்ற  இணையதளத்தில் சென்று பார்க்கலாம்

இதுவரை பான் கார்டு பெற்றுள்ள 29 கோடி பேரில், 6.2 கோடி பேர் மட்டுமே ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 5.2 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்வதாக புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!