ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா! ஹோட்டலில் புகுந்து தாக்கிய சிவசேனா!

Published : Mar 24, 2025, 10:55 AM ISTUpdated : Mar 24, 2025, 03:40 PM IST
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா! ஹோட்டலில் புகுந்து தாக்கிய சிவசேனா!

சுருக்கம்

குணால் கம்ராவின் விமர்சனத்தால் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிவசேனா எம்பி நரேஷ் மஸ்கேவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

மும்பையில் உள்ள "தி யுனிகான்டினென்டல்" ஹோட்டலில் சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். குல் காம்ரா, ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்ததால், அவரது நிகழ்ச்சி நடக்கும் ஹோட்டலில் சிவசேனா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குணால் கம்ராவின் பேச்சுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஷிண்டே குறித்து அவரது கருத்துக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். குணால் கம்ரா உத்தவ் தாக்கரேவிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏக்நாத் ஷிண்டேவை விமர்சிப்பதாக நரேஷ் மஸ்கே குற்றம் சாட்டியுள்ளார். "காம்ரா ஒரு காமெடியன். பாம்பின் மீது கால் வைத்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்" என்று மஸ்கே எச்சரித்துள்ளார்.

"நாட்டில் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாட முடியாது. நாங்கள் பாலசாகேப் தாக்கரேவின் சிவசேனா தொண்டர்கள். நாங்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்தால், நாட்டை விட்டே ஓட நேரிடும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் குணால் கம்ரா, மகாராஷ்டிர அரசியல் குறித்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அதில் ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதனால் சிவசேனா தொண்டர்கள் காம்ராவின் ஸ்டுடியோவில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!