
தமிழ் புத்தாண்டை தொடர்ந்து வரும் சனிக்கிழமையையும் சேர்த்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவியர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 14-ம் தேதி சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 15 ஆம் தேதி கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. ஆகையால் இந்த இரு நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிகள் செயல்பட்டு அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுகிழமை பள்ளிகளுக்கு வார விடுமுறை வருகிறது.
இதை அடுத்து சனிகிழமையும் சேர்த்து விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனை நிறைவேற்றம் வகையில், தற்போது புதுவை அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சனிக்கிழமை ஏப்ரல் 16 ஆம் தேதியை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 15 ஆம் தேதி கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது.
இந்த இரு நாட்களுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் ஏப்ரல் 16 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலைநாள், இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதால் சனிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்ற அரசு ஏப்ரல் 16 ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.