
வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும்போதெல்லாம், அதற்கு மதச்சாயம் பூசி, மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது வேதனை அளிக்கிறது என்றும் , எல்லா மதமாற்ற திருமணங்களையும் தவறாக பார்க்க தேவை இல்லை என்றும் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஒரு இந்து மத இளம்பெண், ஒருவர் கடந்த மே 16–ந் தேதி, வீட்டை விட்டு வெளியேறி, தன் காதலரான முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து அந்த அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், இருவரையும் அரியானா மாநிலத்தில் இருந்து போலீசார் பிடித்து அழைத்து வந்தனர்.
அப்பெண்ணை பெற்றோருடன் செல்ல கீழ்கோர்ட்டு அனுமதித்தது. அந்த பெண்ணின் மனதை மாற்றுவதற்காக, அவரை ஒரு யோகா மையத்தில் பெற்றோர் சேர்த்தனர்.
இதையடுத்து அந்த முஸ்லிம் இளைஞர் கேரள உயர்நீதிமன்றத்தில் தனது மனைவியை மீட்டுத் தருமாறு ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதையடுத்த அந்த பெண் ஒரு தனி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டர். முதலில் பெற்றோருடன் செல்வதாக கூறிய அந்த பெண், பின்னர் 4 நாட்களில், கணவருடன் செல்லவே விரும்புவதாக தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.சிதம்பரேஷ், சதீஷ் நினான் ஆகியோர் அடங்கிய கேரள ஐகோர்ட்டு அமர்வு, இவர்களின் திருமணம் செல்லும் என்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
தனது
ஒருவர், தான் விரும்பிய மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அரசியல் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அந்த உரிமையை யாராலும் பறிக்க முடியாது என்று குறிப்பிட்டனர்..
வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும்போதெல்லாம், அதற்கு மதச்சாயம் பூசி, மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது வேதனை அளிக்கிறத என குறிப்பிட்ட நீதிபதிகள், எல்லா மதமாற்ற திருமணங்களையும் தவறாக பார்க்க தேவை இல்லை என்றும் கூறினர்.