அதிவேகத்தில் கார்கள் மோதல்; மல்யுத்த வீரர்கள் அறுவர் பலி; ஐந்து பேர் காயம் - போட்டி முடிந்து திரும்பும்போது சோகம்...

First Published Jan 13, 2018, 1:18 PM IST
Highlights
High speed cars Wrestlers are Five injured - tragedy when the match ends ...


மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். புனேயில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்த மல்யுத்த வீரர்கள் விபத்தில் சிக்கினர்.

மகாராஷ்டிராவில் உள்ள சாங்லி மாவட்டம் கடேகேன் தாலுகா பகுதியில் பாலம் ஒன்றின் அருகே இரண்டு வாகனங்கள் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில், நான்கு மல்யுத்த வீரர்கள் உள்ளிட்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மல்யுறுத்த வீரர்கள் மஹராஷ்டிராவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் கலந்துவிட்டு, திரும்புகையில் இந்த விப்பது ஏற்பட்டுள்ளது..

இந்த விபத்து குறித்து சாங்லி மாவட்ட காவலாளர்கள் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும், விபத்துக்கு காரணம் வாகனக் கோளாறா? அல்லது குடிபோதையால் வாகனத்தை ஓட்டி வந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் விபத்து குறித்து காவலாளார்கள் விசாரித்து வருகின்றனர்.

click me!