
பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 1 முதல் தொடங்க உள்ளது. அதற்கு முன், புதிய மசோதாக்கள் குறித்த விவாதத்திற்காக மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுக்கும் கூட்டம் அழைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமும், வரவிருக்கும் பாராளுமன்ற அமர்வு சண்டிகர் தொடர்பான மசோதா காரணமாக மிகுந்த சர்ச்சையுடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ், அகாலி தளம் உள்ளிட்ட பஞ்சாப் கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்த குளிர்காலத் தொடர் அமர்வுக்காக மொத்தம் 12 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 10 புதிய மசோதாக்கள் இந்த அமர்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. புதிய மசோதாக்களில் அணுசக்தி துறையை தனியார் நிறுவனங்களுக்கு திறக்கிறது, உயர் கல்வி துறையில் புதிய மாற்றங்கள், சண்டிகர் நிர்வாகத்தை சட்டமன்றம் இல்லாத பிற யூனியன் பிரதேசங்களின் மாதிரியாக மாற்றுதல் போன்ற திட்டங்கள் உள்ளன.
அதுமட்டுமல்லாமல், காப்பீட்டுத் துறையில் திருத்தங்கள், பங்குச் சந்தை விதிகளில் புதுப்பிப்பு, தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தும் விதிகள் எளிமைப்படுத்தல் போன்ற பரிந்துரைகளும் இந்த மசோதாக்களில் இடம்பெற்றுள்ளன. இதோடு, 131வது அரசியல் திருத்த மசோதா மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சண்டிகர் மசோதா குறித்த முக்கிய அம்சங்கள்:
அரசியல் எதிர்ப்பு:
பட்டியலிடப்பட்ட முக்கிய மசோதாக்கள்: