உலகழகி ஐஸ்வர்யா ராய் வீட்டில் தீ..! ஆறுதல் கூறிய சச்சின் மாமியார்..!

 
Published : Oct 28, 2017, 02:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
உலகழகி ஐஸ்வர்யா ராய் வீட்டில் தீ..! ஆறுதல் கூறிய சச்சின் மாமியார்..!

சுருக்கம்

fire in aiswarya house in mumbai

உலகழகி ஐஸ்வர்யா ராய் வீட்டில் தீ..! ஆறுதல் கூறிய சச்சின் மாமியார்..!

இன்றளவும் உலகழகி என்றாலே ஐஸ்வர்யா ராய் தான் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு மக்கள்  மத்தியில் நிலைத்து நிற்பவர்.
 

ஐஸ்வர்யா ராய் மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் வசித்து வருகிறார். இவரின் தாய் பிருந்தா ராய் பந்த்ரா பகுதியில் உள்ள லாமெர் என்னும் அடுக்குமாடியில் வசித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராயின் தாய் வசித்து அதே அடுக்குமாடியில் தான் கிரிகெட் ஜாம்பாவான் சச்சின் மாமியார் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் கடந்த  செவ்வாய்கிழமை மதியம் 16 மாடிகள் கொண்ட லா மெர் கட்டிடத்தின் 13 மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்து பற்றி தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 45 நிமிடம் போராடி தீயை அணைத்துள்ளனர்

இதனை கேள்விபட்டதுமே ஐஸ்வர்யா ராய் பதறி போய் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளார்.அழுதுக்கொன்டே சென்ற ஐஸ்வர்யா ராய்க்கு உற்ற துணையாக உள்ள அபிஷேக் தொடர்ந்து அறுதல் கூறிய வண்ணம் சென்றுள்ளனர்
பயத்தில் அழுத ஐஸ்வர்யாராய்க்கு அவரது கணவர் ஆறுதல் கூறினார். திருமணத்திற்கு முன்பு இவர் இந்த வீட்டில் தான் வசித்து வந்தார்.

இந்நிலையில்,இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து விரைந்து வந்த ஐஸ்வர்யாவிற்கு, சச்சின் மாமியார் நடந்த சம்பவத்தை விளக்கி கூறினார்
நல்ல வேலையாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது  

.


 

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!