எழுச்சி சிங்கங்களே வாருங்கள்..! கோயிலுக்கு எதிராக விஷமம்... தட்டித்தூக்கிய போலீஸ்..!

Published : Aug 16, 2025, 02:28 PM IST
Fatehpur Tomb Temple

சுருக்கம்

‘‘ஆகஸ்ட் 16 அன்று, அனைவரும் ஃபதேபூர் கல்லறைக்கு அருகில் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் சிங்கங்கள் எழுச்சி கொள்ளுங்கள். அனைவரும் ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது.

இஸ்லாத்தின் எழுச்சி சிங்கங்கள், ஃபதேபூருக்கு வாருங்கள்’... என ஜன்மாஷ்டமி கல்லறை தகராறுக்கு அழைப்பு விடுத்த ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம், ஃபதேபூரில் கல்லறை-கோயில் தகராறு தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் சமீபத்தில் ஒரு சமூக ஊடக பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்தப்பதிவில் ‘‘ஆகஸ்ட் 16 அன்று, அனைவரும் ஃபதேபூர் கல்லறைக்கு அருகில் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் சிங்கங்கள் எழுச்சி கொள்ளுங்கள். அனைவரும் ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது. ஃபதேபூருக்கு வாருங்கள்’’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த எரிச்சலூட்டும் பதிவுகளை வெளியிட்ட வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுத்து இரண்டு பேரை கைது செய்துள்ளது.

இந்தப் பதிவு @up-71 ஃபதேபூர் என்ற பேஸ்புக் ஐடியிலிருந்து வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், இந்த வைரலான பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 16 அன்று இந்து அமைப்புகள் கல்லறையில் பூஜைக்கு அழைப்பு விடுத்திருந்தன. நிலைமையைக் கட்டுப்படுத்த, அண்டை மாவட்டங்களான கௌஷாம்பி, ஹமீர்பூர், பண்டாவிலிருந்து 15 காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஃபதேபூர் கல்லறைக்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பதிவு ஃபதேபூர் காவல்துறையினரால் அகற்றப்பட்டது. இந்தப் பதிவு வேகமாக வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட பயனர் மீது ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் பாரதீய நியாய சம்ஹிதா 163-ன் கீழ் தடை உத்தரவுகளை விதித்துள்ளது. சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய, ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டதற்காக முகமது மொசாஃபர் இம்ரான், அகந்த் பிரதாப் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஃபதேபூரில் உள்ள அபு நகர் ரெடையா பகுதியில் உள்ள கல்லறை தகராறு தொடர்பாக நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கல்லறையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் அங்கு ஊடகங்கள் நுழைவதையும் தடை செய்துள்ளது. பாஜக மாவட்டத் தலைவரின் அழைப்பின் பேரில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி கூடியிருந்த கூட்டம், கல்லறையை ஒரு கோயில் என்று கூறி, அங்கு பூஜை செய்தது. கல்லறை சேதப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, சர்ச்சை தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது. ஜன்மாஷ்டமி சிறப்பு நிகழ்வுக்காக கல்லறையிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் ஐந்து காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜன்மாஷ்டமியை முன்னிட்டு கல்லறை அருகே மூன்று அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 500 மீட்டர் சுற்றளவில் 15 காவல் நிலையங்களின் காவல்துறை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் எந்தவிதமான எரிச்சலூட்டும் விஷயங்களையும் இடுகையிட வேண்டாம் என்று கோட்வாலி பொறுப்பாளர் தர்கேஷ்வர் ராய் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LPG Cylinder: கேஸ் சிலிண்டர் புக் பண்ணியும் டெலிவரி வரலையா? டீலர் அதிக காசு கேட்கிறாரா? இத பண்ணுங்க போதும்!
12 நாட்களில் 7 புண்ணியத் தலங்கள்! IRCTC வழங்கும் மெகா ஜியோதிர்லிங்க யாத்திரை