காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு!!

Published : May 15, 2025, 08:33 AM ISTUpdated : May 15, 2025, 11:57 AM IST
Terrorist attack

சுருக்கம்

ஜம்மு-காஷ்மீரின் டிராலில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. ஷோபியனில் நடந்த மற்றொரு மோதலில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், அவர்களில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் அமைந்துள்ள டிராலின் நாடர் பகுதியில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

இந்தப் பகுதியில் எழுந்து இருக்கும் துப்பாக்கிச் சூட்டை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உறுதிபடுத்தி சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளது. பதிவில், அவந்திபோராவின் நாடர், டிரால் பகுதியில் என்கவுன்டர் தொடங்கியது. பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுக்கள் இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தெற்கு காஷ்மீரின் ஷோபியனில் செவ்வாய்க்கிழமை நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளில் இருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ANI வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷோபியன் மாவட்டத்தில் உள்ள கெல்லரின் ஷுக்ரூ வனப்பகுதியில் பயங்கரவாதிகளில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஆதாரங்களின்படி, பயங்கரவாதிகளில் ஒருவர் முகமது யூசுப் குட்டாய் என்பவரின் மகனும், ஷோபியனில் உள்ள சோட்டிபோரா ஹீர்போராவைச் சேர்ந்தவருமான ஷாஹித் குட்டாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர் ஏப்ரல் 8, 2024 அன்று ஸ்ரீநகரில் உள்ள டேனிஷ் ரிசார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பிரிவு, எல்இடி பயங்கரவாதிகளா என்று தெரிய வந்துள்ளது. இதில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளும் ஒரு ஓட்டுநரும் காயமடைந்தனர். அவர் மார்ச் 8, 2023 அன்று பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.

ஹீர்போராவில் பாஜக சர்பஞ்ச் ஒருவரை மே 18, 2024 அன்று கொன்றதில் குட்டாய் ஈடுபட்டார். மேலும் பிப்ரவரி 3, 2025 அன்று குல்காமில் உள்ள பெஹிபாக் என்ற இடத்தில் பிராந்திய ராணுவ வீரர்களைக் கொன்றதில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அடையாளம் காணப்பட்ட மற்றொரு பயங்கரவாதி, ஷோபியனில் உள்ள வாண்டுனா மெல்ஹோராவைச் சேர்ந்த முகமது ஷாஃபி தாரின் மகன் அட்னான் ஷாஃபி தார் ஆவார். அவர் அக்டோபர் 18, 2024 அன்று பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார் மற்றும் சி பிரிவு எல்இடி பயங்கரவாதியாக என்பது தெரிய வந்துள்ளது. அக்டோபர் 18, 2024 அன்று ஷோபியனில் உள்ள வாச்சியில் உள்ளூர்வாசிகள் அல்லாத தொழிலாளர்களைக் கொன்றதில் அவர் ஈடுபட்டிருந்தார். இருப்பினும், கடைசி பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆபரேஷன் கெல்லர்' என்ற பெயரிலான இந்த நடவடிக்கையால் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!
அதிசயம்! 10வது மாடியில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய முதியவர்.. குஜராத்தில் பகீர் சம்பவம்!