தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்கள் அமிர்த சரோவர் திட்ட இலக்கை எட்டவில்லை: மத்திய அரசு தகவல்

Published : Aug 19, 2023, 05:38 PM ISTUpdated : Aug 19, 2023, 05:56 PM IST
தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்கள் அமிர்த சரோவர் திட்ட இலக்கை எட்டவில்லை: மத்திய அரசு தகவல்

சுருக்கம்

மேற்கு வங்கம், பஞ்சாப், தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு, ஹரியானா, பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 அமிர்த சரோவர் நீர்நிலைகளை ஏற்படுத்தம முயற்சி எடுத்து வருகின்றன. ஆனால், மேற்கு வங்கம், பஞ்சாப், தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு, ஹரியானா, பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஒரு மாவட்டத்திற்கு 75 அமிர்த சரோவர் நீர்நிலைகள் அமைக்கும் இலக்கு எட்டப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை, 1,12,277 அம்ரித் சரோவர் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் 81,425 நீர்நிலைகளில் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் மொத்தம் 66,278 நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன அல்லது புதுப்பிக்கப்பட்டுள்ளன.

உ.பி.யில் தலைவர் அலப்பறை! முதல்வர், ஆளுநருடன் சந்திப்பு... நாளை அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு!

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 75 அம்ரித் சரோவரைக் கட்டுவதற்கு/ புத்துயிர் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படும் நிலையான நீர் ஆதாரங்களை வழங்கும் நோக்கத்துடன் 24 ஏப்ரல் 2022 அன்று பிரதமரால் மிஷன் அம்ரித் சரோவர் தொடங்கப்பட்டது. மிஷனின் சரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் 50,000 அமிர்த சரோவர் என்ற தேசிய இலக்கு எட்டப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை, நில வளத் துறை, குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, நீர்வளத் துறை, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், வன அமைச்சகம் ஆகிய 8 மத்திய அமைச்சகங்கள் இணைந்து அமிர்த சரோவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவையும் பங்கேற்கின்றன.

இத்திட்டத்தில் பாஸ்கராச்சார்யா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் அப்ளிகேஷன் மற்றும் ஜியோ-இன்ஃபர்மேடிக்ஸ் (BISAG-N) இந்தத் திட்டத்துக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், 15 வது நிதி ஆணையத்தின் மானியங்கள் மூலம் இந்த இயக்கம் செயல்படுகிறது.

மொபைல் பயனர்களின் பாதுகாப்புக்கு 2 புதிய சீர்திருத்தங்கள்! KYC, (PoS) முறைகளில் மாற்றம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!