திபெத் - நேபாளம் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்; 32 பேர் பலி; இந்தியாவிலும் பாதிப்பா?

Published : Jan 07, 2025, 09:34 AM ISTUpdated : Jan 07, 2025, 12:34 PM IST
திபெத் - நேபாளம் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்; 32 பேர் பலி; இந்தியாவிலும் பாதிப்பா?

சுருக்கம்

திபெத்-நேபாள எல்லையில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை தாக்கியது. ஒன்பது பேர் பலியாகினர். கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்க மையம் திபெத்தில் பத்தடி ஆழத்தில் இருந்தது. பீகார், டெல்லி உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

சீனாவின் திபெத் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை 6:35 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திபெத் - நேபாளம் எல்லையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்கு 32 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. திபெத் மற்றும் நேபாளம் எல்லையில் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. நேபாளத்தின் லோபுசே நகருக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. மையப்பகுதி திபெத் பகுதியாக இருந்துள்ளது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் பத்தடி ஆழத்தில் உருவாகியுள்ளது. காத்மாண்டுவில் இருந்து சரியாக 150 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் எவரெஸ்ட் கேம்ப் மற்றும் நேபாளின் கும்பு கிளேசியரின் அருகில் லோபுசே நகரம் இருக்கிறது. 

பீகார் முதல் டெல்லி வரை நிலநடுக்கம் உணரப்பட்டது. பீகாரில் பாட்னா உள்ளிட்ட பல பகுதிகளிலும், வடக்கு பீகாரில் பல இடங்களிலும் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது.

யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின் (யுஎஸ்ஜிஎஸ்) படி, நிலநடுக்கம் காலை 6:35 மணிக்கு நேபாள-திபெத் எல்லைக்கு அருகே லோபுசேவிலிருந்து வடகிழக்கே 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. 

திபெத்தின் ஷிகாட்சேயில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்:

திபெத்தின் இரண்டாவது பெரிய நகரமான ஷிகாட்சேவில் செவ்வாய்க்கிழமை காலை 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை சீனாவும் உறுதிபடுத்தியுள்ளது. ஷிகாட்சே நிலநடுக்கத்தை தொடர்ந்து 200 கி.மீ சுற்றளவில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட 29 நிலநடுக்கங்கள் முன்னதாக ஏற்பட்டன. இவை அனைத்தும் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட குறைவான தீவிரம் கொண்டவை. நேபாள தலைநகர் காத்மாண்டுவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

நேபாளத்தில் 2015ல் நிலநடுக்கம்:
கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி நேபாளத்தில் இதுபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் 7.8 ஆக இருந்தது. இதன் காரணமாக சுமார் 9,000 பேர் பலியாகினர். நேபாளம் வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். சுமார் 10 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. இதற்கு முன்பு 1934-ம் ஆண்டு இந்தப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 8,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நேபாளத்தில் ஏன் பெரிய நிலநடுக்கம் ஏற்படுகிறது?
குறிப்பாக நிலநடுக்கங்களால் நேபாளம் பாதிக்கப்படக்கூடியது. இது இந்தோ-ஆஸ்திரேலிய மற்றும் ஆசிய தட்டுகள் என்ற இரண்டு மாபெரும் டெக்டோனிக் தட்டுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த தட்டுகள் மோதியதால் இமயமலை மலைகள் எழுந்துள்ளன. இந்த தட்டுகள் மோதுவதால், இங்கு தொடர்ந்து பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

கடந்த 22 நாட்களில் நேபாளத்தில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுள்ள 10 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  இது ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படப் போகிறது என்பதை உணர்த்தியது. நவம்பர் 2023 இல் நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டு 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

Rahul Gandhi with Messi: மெஸ்ஸியுடன் கூலாக உரையாடிய ராகுல் காந்தி.. ரசிகர்கள் ஆரவாரம்..
Lionel Messi: ஹைதராபாத்தில் மெஸ்ஸி மேஜிக்.. முதல்வர் ரேவந்த் உடன் 2 கோல்கள்!