அட கன்றாவியே.. தன் விந்துவை கலந்து Falooda விற்ற நபரால் பரபரப்பு.. அதுவும் எப்படி தெரியுமா? வைரல் வீடியோ!

Ansgar R |  
Published : Mar 19, 2024, 09:16 PM IST
அட கன்றாவியே.. தன் விந்துவை கலந்து Falooda விற்ற நபரால் பரபரப்பு.. அதுவும் எப்படி தெரியுமா? வைரல் வீடியோ!

சுருக்கம்

Disgusting Video : மக்களின் சுகாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், ஒரு நபர் செய்த குமட்டல் வரவைக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நெகொண்டா பகுதியில் ஐஸ்கிரீம் விற்பனையாளர் ஒருவர், ஃபலூடா ஐஸ்கிரீமில் தனது விந்துவை கலந்து வழங்கியபோது பிடிபட்டதால், அது பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கவலையளிக்கும் சம்பவம், ஒருவரால் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த செயலை குறித்து மக்கள் கொதிப்படைந்து அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஐஸ்கிரீமில் தன் விந்துவை கலக்கும் முன் அந்த நபர் சுயஇன்பம் கொள்ளும் சம்பவமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து டைவ்! இன்ஸ்டாவில் ரீல்ஸ்! கெத்து காட்ட நினைத்து கொத்தாக சிக்கிய யூடியூபர்கள்

இத்தகைய கண்டிக்கத்தக்க செயல்கள் பொது சுகாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல் உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் அடிப்படை நெறிமுறை தரங்களையும் மீறுவதாகும் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இந்த வியாபாரி பற்றிய புகார்கள் கிடைத்ததும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் பாலாஜி என்ற ஐஸ்கிரீம் கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 

அசுத்தமான ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருந்த பலர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அவர்கள் மீது சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வாளர்கள், தங்கள் முழுமையான விசாரணையில், அந்த ஐஸ்கிரீம் கடையில் விற்கப்பட்ட பழ சாலட்கள் உட்பட மற்ற பொருட்களையும் ஆய்வு செய்தனர். 

இதனையடுத்து சாலையோரங்களில் வண்டிகளில் ஃபலூடா ஐஸ்கிரீம் விற்கும் விற்பனையாளர்களுக்கும், சாலையோர உணவுக் கடைகளின் உரிமையாளர்களுக்கும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர், தூய்மையை பராமரிப்பது மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். 

பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நேர்மையற்ற நபர்களால் ஏற்படும் ஆபத்துகளை இந்த சம்பவம் அப்பட்டமாக காட்டுகின்றது. இதுபோன்ற மோசமான செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புடன் இருக்கவேண்டிய வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உடனைடியாக அந்த நபர் மற்றும் அந்த கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கப்படுவதாக மக்கள் பலரும் கூறிவருகின்றனர். 

புருஷனை பிரிஞ்சு வந்துட்டோம்னு கொஞ்சம் கூட கவலை இல்லாமல் யார் கூட பேசுற! ஆத்திரத்தில் அக்காவை கொலை செய்த தம்பி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!