
டெல்லியில் வாகன நிறுத்தத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள், 30 புதிய இ-ரிக்ஷாக்கள் எரிந்து சாம்பலாகின.
தலைநகர் டெல்லியில் ஜாமியா நகரில் இன்று காலை வாகனம் நிறுத்துமிடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஏராளமான வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிய தொடங்கின. இதுதொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 10 கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள், 30 புதிய இ-ரிக்ஷாக்கள், 50 பழைய இ-ரிக்ஷாக்கள் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தில் அதிஷ்டவசமாக எந்த ஒரு உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. எப்படி தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.