டெல்லி விமான நிலையம்.. ஓடுபாதையில் CAT III தொழில்நுட்பம் அமல்.. இதனால் என்ன நடக்கும்? - முழு விவரம் இதோ!

Ansgar R |  
Published : Feb 03, 2024, 09:14 PM IST
டெல்லி விமான நிலையம்.. ஓடுபாதையில் CAT III தொழில்நுட்பம் அமல்.. இதனால் என்ன நடக்கும்? - முழு விவரம் இதோ!

சுருக்கம்

Delhi Airport CAT III : டெல்லி விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையில் புதிய CAT III தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இது என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

டெல்லி விமான நிலையங்களில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, குளிர்காலத்தில் விமானங்கள் தாமதமாகி, அதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் ஒன்று நடந்துள்ளது. தில்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது ஓடுபாதை புதுப்பித்தலை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளது.

அந்த இரண்டாவது ஓடுபாதையில் CAT III தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது, இது மிகவும் மோசமான வானிலையில் கூட விமானிகள் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்குவதை உறுதி செய்கிறது. விமான நிலைய அதிகாரிகளின் தகவலின்படி, இந்த ரன்வே இன்று பிப்ரவரி 3, 2024 முதல் வணிக பயன்பாட்டிற்காக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு (ATC) அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. 

5வது சம்மன்: தவிர்த்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. நீதிமன்றத்துக்கு சென்ற அமலாக்கத்துறை - அடுத்து என்ன?

இதைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையம் இப்போது நான்கு செயல்பாட்டு ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி விமான நிலையத்தில் CAT III இயக்கப்பட்ட ஓடுபாதை 10/28 இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சமூக ஊடக தளமான 'X' இல் அறிவித்தார்.

சரி CAT III தொழில்நுட்பம் என்றால் என்ன?

CAT III (வகை III) தொழில்நுட்பம் என்பது ஒரு மேம்பட்ட தரையிறங்கும் அமைப்பு (ILS) திறன்களைக் குறிக்கிறது, இது அடர்த்தியான மூடுபனி, கனமழை அல்லது பனி உள்ளிட்ட மிகக் குறைந்த பார்வை நிலைகளில் விமானத்தை தரையிறக்க அனுமதிக்கிறது. CAT III அமைப்பு முதன்மையாகத் தெரிவுநிலை மிகவும் குறைவாக இருக்கும் போது தரையிறங்கும் போது பாதுகாப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

CAT IIIக்குள் வெவ்வேறு நிலைகள் உள்ளன, அதாவது CAT III, CAT IIIB மற்றும் CAT IIIC, ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் திறன்களைக் கொண்டுள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த G20 உச்சிமாநாட்டின் முடிவிற்குப் பிறகு, செப்டம்பர் 2023ன் நடுப்பகுதியில் 3,813 மீட்டர் மற்றும் 45 மீட்டர் அகலம் கொண்ட இரண்டாவது ஓடுபாதையில் DIAL இந்த பணிகளை மேற்கொண்டது.

அஹ்லான் மோடி! அபுதாபியில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 60,000 இந்தியர்கள் முன்பதிவு!

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!