உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா - ஜே.எஸ்.கேஹர் பரிந்துரை!!

Asianet News Tamil  
Published : Jul 26, 2017, 01:57 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா - ஜே.எஸ்.கேஹர் பரிந்துரை!!

சுருக்கம்

deepak mishra will be the supreme court chief justice

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பெயரை, தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஜே.எஸ். கேஹர் பதவிக் காலம், அடுத்த மாதம் 27-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியை நியமனம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 



உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என, தற்போதைய தலைமை நீதிபதி கேஹரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அதற்கு அவர் தீபக் மிஸ்ரா பெயரை பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது 63 வயதாகும் தீபக் மிஸ்ரா, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் பதவி வகிப்பார்.

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
நிதின் நபின் என்னுடைய பாஸ்; நான் சாதாரண தொண்டன்.. பிரதமர் மோடி புகழாரம்!