"நிர்பயாவுக்கு கிடைத்தது நியாயம்!!" - 4 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்...!!

 
Published : May 05, 2017, 02:40 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
"நிர்பயாவுக்கு கிடைத்தது நியாயம்!!" - 4 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்...!!

சுருக்கம்

death sentence for accused in nirbhaya case

நிர்பயா கொலை வழக்கில்  அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற விதித்த தூக்கு தண்டனையை  உச்சநீதிமன்றம் உறுதி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமான அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பச் சூழ்நிலையையும் அவர்கள் இளம் வயதையும் கருதி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற வாதத்தை முன்வைத்துள்ளனர்.

ஆனால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் தண்டனைகளை வலுவாக்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற விதித்த தூக்கு தண்டனையை  உச்சநீதிமன்றம் உறுதி செய்து நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி  ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!