இந்திய ராணுவத்திற்காக இரண்டாம் வகுப்பு மாணவன் செய்த நெகிழ்ச்சியான செயல்

Published : May 15, 2025, 08:19 PM ISTUpdated : May 15, 2025, 08:33 PM IST
KARUR STUDENT WAR DONATION

சுருக்கம்

நாட்டு எல்லையில் போர் சூழல் நிலவி வரும் நிலையில்  கரூரைச் சேர்ந்த 2ஆம் வகுப்பு மாணவன் தான் சேமித்த பணத்தை ராணுவத்திற்கு வழங்கியுள்ளார்.

ராணுவத்திற்கு உதவிய சிறுவன் : பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்திய சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது. இதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் சூழல் உருவானது. இரு தரப்பிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவான் வான் பாதுகாப்பு கவசம் ட்ரோனை நடுவானில் தாக்கி அழித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நின்றனர். தமிழக அரசு சார்பாக சென்னையில் மிகப்பெரிய அளவிலான பேரணி நடத்தப்பட்டது.

10 மாத சேமிப்பை ராணுவத்திற்கு வழங்கிய சிறுவன்

இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பிரபலங்கள் நிதிகளை வழங்கி வருகிறார்கள். அதன் படி கரூரில் 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தான் 10 மாத காலமாக சேமித்து வந்த பணத்தை ராணுவத்திற்கு வழங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. அப்போது சதீஷ்குமார்- பவித்ரா தம்பதியின் மகன் தன்விஷ் தான் உண்டியலில் சேகரித்த பணத்தை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வழங்கினார். 

சிறுவனை பாராட்டிய ஆட்சியர்

இதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனர், தான் கடந்த 10 மாதங்களாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுத்த பணத்தை சேமித்து வந்ததாகவும், எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தனது பணத்தை ராணுவ வீர்ரர்களுக்கு கொடுக்க வந்ததாக கூறினார். மேலும் குழந்தையின் தன்னலமற்ற சேவை மற்றும் தாராள மனப்பான்மைக்காக பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?