சிலியில் பயங்கர நிலநடுக்கம் - 6.4 ரிக்டராக பதிவு

Asianet News Tamil  
Published : Nov 05, 2016, 10:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
சிலியில் பயங்கர நிலநடுக்கம் - 6.4 ரிக்டராக பதிவு

சுருக்கம்

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று அதிகாலையில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.

தலைநகர் சாண்டியகோவின் தெற்கு பகுதியில் இருந்து 192 கி.மீ., தொலைவில், 87 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.4-ஆக பதிவாகியுள்ளது.  இந்நிலநடுக்கத்தால் சாண்டியாகோவில் கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan: விவசாயிகளுக்கு குட் நியூஸ்! அக்கவுன்ட்டுக்கு வந்தாச்சு ₹2000, இப்படி செக் பண்ணுங்க
டாடா குழுமத்திற்கு வந்த சோதனைய பார்த்தீங்களா..? வாடகைக்கு வந்த ரத்தன் டாடா வாழ்ந்த வீடு..