மாட்டிகிட்டயே பங்கு.. நேபாள எல்லையில் வீடியோ எடுத்தவரை.. அலேக்காக தூக்கிய SSB

Published : Nov 25, 2025, 02:22 PM IST
china man arrested india nepal border illegal entry sensitive area videography

சுருக்கம்

இந்திய-நேபாள எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்த சீன நபர் SSB படையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பல நாட்டு நாணயங்கள், இந்திய எல்லைப் பகுதிகளின் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள பஹ்ரைச் மாவட்டம் திங்கள்கிழமை அதிக கவனத்தை ஈர்த்தது. நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக கூறப்படும் ஷீன நாட்டு நபர் லியு குன்ஜிங் (49), SSB (சஷஸ்த்ர சீமா பல்) படையினரால் ரூபாய்டிஹா சோதனைச் சாவடியில் பிடிக்கப்பட்டார். எல்லைப் பகுதிகளை அவர் வீடியோ எடுத்தது சந்தேகத்தை அதிகரித்தது.

சந்தேகத்தை கிளப்பிய முக்கிய காரணங்கள்

குன்ஜிங்கிடம் சீனா, நேபாள, பாகிஸ்தான் நாணயங்கள் இருந்தது. மேலும், அவரிடம் இந்தியாவிற்கான செல்லுபடியாகும் விசா அல்லது பயண ஆவணம் ஏதும் இல்லை என்று SSB 42வது படையணி கமாண்டன்ட் கங்காசிங் உதாவத் தெரிவித்தார். இந்த காரணத்தால் அவர் உளவு முயற்சிக்காக வந்தவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மொபைல் போன்களில் அதிர்ச்சி தகவல்

விசாரணையில், அவரிடம் இருந்த மூன்று மொபைல் போன்களில் இந்தியாவின் இடங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளின் வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக நேபாள வரைபடத்தையும் வைத்திருந்தார். ஆனால் விசாரணையில் அவர் இந்தி, ஆங்கிலம் தெரியாது என சைகை மூலம் தெரிவித்தது அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை தந்துள்ளது.

பாகிஸ்தானிலும் சென்றுள்ளார்

SSB மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணையில், குன்ஜிங் முன்னதாக பாகிஸ்தானுக்கும் பயணம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதற்கான விசா சட்டப்படி இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் இது ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

இந்தியாவிற்குள் எப்படி நுழைந்தார்?

விசாரணையின் அடிப்படையில், குன்ஜிங் நவம்பர் 15ஆம் தேதி சீனாவில் இருந்து நேபாளத்திற்கு வந்தார். பின்னர் நவம்பர் 22 அன்று நேபால்கஞ்ச் சென்ற அவர், நவம்பர் 24 அன்று ரூபைடிஹா எல்லை வழியாக இந்தியாவிற்குள் வந்துள்ளார். எல்லை பகுதிகளை வீடியோ எடுத்தது அவரின் நோக்கம் குறித்து சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

விசாரணை தொடர்கிறது

கைது செய்யப்பட்ட அவர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு, வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு முகவர்கள் தற்போது மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளவு முயற்சியா?

இந்தச் சம்பவம், இந்திய-நேபாள எல்லையில் பாதுகாப்பு கண்காணிப்பின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. குன்ஜிங் வெறும் வழிமாறி வந்தாரா? இல்லையேல் இது ஒரு பெரிய சதி முயற்சியின் தொடக்கமா? என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!