பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம்... குடியரசுத் தலைவர் அதிரடி..!

Published : Jul 20, 2019, 03:10 PM IST
பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம்... குடியரசுத் தலைவர் அதிரடி..!

சுருக்கம்

பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேற்குவங்க ஆளுநர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேற்குவங்க ஆளுநர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

* மத்தியபிரதேச ஆளுநராக இருந்த ஆனந்திபென் பட்டேல், உத்தரபிரதேச மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குஜராத் மாநில முன்னாள் முதல்வராக இருந்தார். 

* மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெயதீப் தன்கர் மற்றும் திரிபுரா ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* பீகார் ஆளுநராக உள்ள லால் ஜி டன்டன், மத்தியபிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பீகாரில் புதிய ஆளுநராக பாகு சவுகனும், நாகாலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர். திரிபுரா மாநிலத்தில் புதிய ஆளுநராக ரமேஷ் பய்ஸ் ஆகியோர்களை மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Free LPG: பெண்களுக்கு இலவச LPG இணைப்பு... யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
சென்னையில் விமான சேவை குறைப்பு : பயணிகள் கடும் அவதி! நிலைமை சீரடையுமா?