செல்போன், இன்டர்நெட் கட்டணம் எகிறப்போகிறது - ஜூலை1முதல் ‘பர்சை’ பதம் பார்க்கும் ‘ஜிஎஸ்டி’...

 
Published : Jun 30, 2017, 09:44 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
செல்போன், இன்டர்நெட் கட்டணம் எகிறப்போகிறது - ஜூலை1முதல் ‘பர்சை’ பதம் பார்க்கும் ‘ஜிஎஸ்டி’...

சுருக்கம்

Cell phone and internet bill is going to increase GST from july 1

ஜூலை 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) அமலாகும் நிலையில், செல்போன் ரீசார்ஜ் கட்டணம், பிராட்பேண்ட் இன்டர்நெட் கட்டணம் ஆகியவற்றுக்கு செலுத்தும் பணத்தின் அளவும் அதிகரிக்க இருக்கிறது.

இதற்கு முன் 15 சதவீதம் சேவை வரியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசூலித்து  வந்த நிலையில், ஜூலை 1-ந்தேதிமுதல் ஜி.எஸ்.டி. வரியில் 18 சதவீதம் வசூலிக்க இருக்கின்றன. இதனால், ஏறக்குறைய 3 சதவீதம் வரி உயர்வு அமலாகிறது.

இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஜூலை 1-ந்தேதிக்கு பிறகு, செல்போன் ரீசார்ஜ் கட்டணம், போஸ்ட்பெய்ட் கட்டணம், இன்டர்நெட் கட்டணம் ஆகியவை அதிகரிக்கும்.

ஜி.எஸ்.டி. வரி தொலைத்தொடர்பு சேவைகளுக்கு 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன் 15 சதவீதம் மட்டுமே இருந்தது.

இதன் தாக்கம் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதாவது நீங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் இன்டர்நெட் கட்டணம் செலுத்தினால், ஜூலை 1-ந்தேதிக்கு பின், ரூ.1030 ஆக செலுத்த வேண்டியது இருக்கும். 

அதேசபோல ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு டாக் டைம் குறைக்கப்படலாம் '' எனத் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!