ராணுவ வீரர்களுக்கு எதிரான Fake News.. உடனே ரியாக்ட் செய்த இந்திய ராணுவம் - வெளியான தகவல் என்ன? முழு விவரம்!

Ansgar R |  
Published : Sep 19, 2023, 11:00 PM ISTUpdated : Sep 19, 2023, 11:08 PM IST
ராணுவ வீரர்களுக்கு எதிரான Fake News.. உடனே ரியாக்ட் செய்த இந்திய ராணுவம் - வெளியான தகவல் என்ன? முழு விவரம்!

சுருக்கம்

காலிஸ்தான் தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவுகள் கெட்டுவிட்டதாக அனைத்து வகையான போலியான பதிவுகள் மற்றும் செய்திகள் தற்போது அனைத்துவிதமான இணையதளங்களிலும் வைரலாக பரவி வருகின்றன.

போலிச் செய்திகள் குறித்து இந்திய ராணுவம் : இந்திய ராணுவம் மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்புக் கட்டளை குறித்து சமூக ஊடகங்களில் அனைத்து வகையான வதந்திகளும் பரப்பப்படுகின்றன. சமூக வலைதளங்களில் இதுபோன்ற வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்குமாறு ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்திய ராணுவம், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில், சில போலி செய்திகளுக்கு எதிராக மக்களை எச்சரித்துள்ளது.

உண்மையில், காலிஸ்தான் தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து அனைத்து வகையான போலி பதிவுகளும் ,செய்திகளும் வைரலாகி வருகின்றன. சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் கொலையில், இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கன்னட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதையடுத்து, Parkash Kumar Bheel என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். 

மாநிலங்களின் பணம் எங்ககிட்ட கிடையாது.. ஜிஎஸ்டி குறித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அதில் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் கோபத்தில் இருப்பதாக போலியான தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ராஷ்டிரபதி பவனில் இருந்து சீக்கிய பாதுகாவலர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சீக்கிய வீரர்களுக்கு விண்ணப்பித்த பிறகும் விடுப்பு வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு எதிராக போலியான செய்திகளை பரப்புவதற்கு, ராணுவம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இராணுவத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் எதிரிகளால் அனைத்து விதமான போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று இராணுவம் தெளிவாகக் கூறியுள்ளது.

 

இதுபோன்ற செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும், இந்திய ராணுவ வீரர்கள் இதுபோன்ற வதந்திகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது. ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளது. 

அதில் அந்த போலி செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, சமூக ஊடகங்களில் நம் எதிரிகளால் இந்திய இராணுவ வீரர்கள் குறித்து போலி செய்திகள், வதந்திகள் மற்றும் வெறுப்புகள் பரப்பப்படுகின்றன என்று இராணுவம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பொய்யான செய்திகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளது.

கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பயணம்.. தலிபான் நண்பர்களை பார்க் சென்ற இளைஞர் - பதறவைத்த Gun Collection!

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!