பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து... 9 பேர் உயிரிழப்பு... 25 பேர் படுகாயம்

Published : Nov 26, 2018, 10:23 AM ISTUpdated : Nov 26, 2018, 10:24 AM IST
பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து... 9 பேர் உயிரிழப்பு... 25 பேர் படுகாயம்

சுருக்கம்

இமாச்சலப் பிரதேசத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். 25 படுகாயமடைந்துள்ளனர். 

இமாச்சலப் பிரதேசத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். 25 படுகாயமடைந்துள்ளனர்.

 

சிராமுர் மாவட்டத்தில் உள்ள நஹன், ரேணுகா சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதேபோல் சிம்லாவுக்கு சுற்றுலா வந்த மற்றொரு பேருந்தும் விபத்தில் சிக்கியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக பேருந்து விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!