அரசு பேருந்து குட்டையில் கவிழ்ந்து விபத்து... 7 பேர் உயிரிழப்பு

Published : Oct 21, 2018, 11:50 AM IST
அரசு பேருந்து குட்டையில் கவிழ்ந்து விபத்து... 7 பேர் உயிரிழப்பு

சுருக்கம்

அசாமில் குட்டையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து பார்பேட்டா நகரை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது.

அசாமில் குட்டையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து பார்பேட்டா நகரை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. 

நேற்று மாலை நல்பாரி மாவட்டத்தின் வழியாக சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரத்தில் உள்ள குட்டைக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிலரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?