குருவாயூர் கோவில் தகர்க்கப்படும் - மர்ம நபர் மிரட்டலால் பாதுகாப்பு அதிகரிப்பு!!

 
Published : May 20, 2017, 04:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
குருவாயூர் கோவில் தகர்க்கப்படும் - மர்ம நபர் மிரட்டலால் பாதுகாப்பு அதிகரிப்பு!!

சுருக்கம்

bomb threat to guruvayur temple

கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயிலுக்கு மர்ம நபர் இன்று காலை தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்ததால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநிலம், குருவாயூரில் பிரபலமான கிருஷ்ணர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.

இந்த கோவில் நிர்வாகத்தில் ஊழல் மலிந்து இருப்பதாக குற்றம் சாட்டிய மர்ம நபர் ஒருவர், கோவிலை அழித்துவிடப் போவதாக, போனில் மிரட்டல் விடுத்தார்.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் குருவாயூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் மீது வழக்குப் பதிவு செய்து, போனில் மிரட்டல் விடுத்தவர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், மிரட்டல் காரணமாக குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு பாதுகாப்பு அதிரிக்கப்பட்டு உள்ளது. வெடிகுண்டு நிபுணர்களும் கோவிலில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!