தெலுங்கானா துபாக் இடைத்தேர்தல்: ஆளும் டி.ஆர்.எஸ்ஸை வீழ்த்தி பாஜக அபார வெற்றி

Published : Nov 10, 2020, 04:22 PM IST
தெலுங்கானா துபாக் இடைத்தேர்தல்: ஆளும் டி.ஆர்.எஸ்ஸை வீழ்த்தி பாஜக அபார வெற்றி

சுருக்கம்

தெலுங்கானா மாநிலம் துபாக் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 1,470 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

தெலுங்கானா மாநிலத்தில் துபாக் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. பாஜக சார்பில் எம்.ரகுநந்தன் ராவும், ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் சோலிபேட்டா சுஜாதாவும் போட்டியிட்டனர்.

இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 23 சுற்று முடிவில், பாஜக வேட்பாளர் எம்.ரகுநந்தன் ராவ் 62,772 வாக்குகளும் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி வேட்பாளர் சோலிபேட்டா சுஜாதா 61,302 வாக்குகளும் பெற்றனர்.

இதையடுத்து 1,470 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ரகுநந்தன் அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செருக்கு ஸ்ரீநிவாஸ் ரெட்டி வெறும் 21,819 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
 

PREV
click me!

Recommended Stories

I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: விரலில் 'மை' க்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள்.. பொங்கியெழுந்த எதிர்க்கட்சிகள்!