பிளாக் லிஸ்டில் உள்ள நிறுவனத்திற்கு டெண்டர்.. ரூ.100 கோடி ஊழல்..சிவசேனா அரசு மீது பாஜக குற்றச்சாட்டு..

Published : Feb 12, 2022, 03:41 PM IST
பிளாக் லிஸ்டில் உள்ள நிறுவனத்திற்கு டெண்டர்.. ரூ.100 கோடி ஊழல்..சிவசேனா அரசு மீது பாஜக குற்றச்சாட்டு..

சுருக்கம்

மகாரஷ்டிரா மாநிலத்தின் ஆளும் சிவசேனா அரசு மீது கொரோனா தடுப்பு மையம் டெண்டர் விவகாரத்தில் 100 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக பாஜக குற்றச்சாட்டியுள்ளது.   

மகாராஷ்டிராவில், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் மற்றும் பாஜக தலைவர் கிரித் சோமையா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் செயல்முறை நிற்கவில்லை. தற்போது மீண்டும் சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாஜக தலைவர் கிரித் சோமையா கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். சஞ்சய் ரவுத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 100 கோடி ரூபாய் அளவிற்கு கோவிட் கேர் சென்டர் டெண்டர் விடுவதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

சஞ்சய் ராவுத்தின் நெருங்கிய உதவியாளரான சுஜித் பட்கருக்கு போலி ஆவணங்கள் மூலம் வேலை கிடைத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். லைஃப் லைன் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற கூட்டு நிறுவனத்தை நிறுவியதாக ராவத் கூறியது தவறானது என்றும் அவர் கூறியுள்ளார். மும்பையின் தாஹிசர் வொர்லி என்எஸ்சிஐ மகாலக்ஷ்மி ரேஸ் கோர்ஸ் முலுண்ட் கோவிட்-கேர் சென்டரில் தனக்கு வேலை கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். பாஜக தலைவர் கிரித் சோமையா தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதோடு, விசாரணையும் கோரியுள்ளார் 

முன்னதாக, ரவுத் மது வணிகத்தில் பங்குதாரர் என்று கிரீட் சோமையா குற்றம் சாட்டியிருந்தார்.இதற்கு முன்பும் கிரீட் சோமையா, சஞ்சய் ராவத் ஒயின் நிறுவனத்தில் பங்குதாரர் என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவின் பெரிய தொழிலதிபர் அசோக் கர்க்கின் மேக்பி குளோபல் லிமிடெட் என்ற மது நிறுவனத்தில் ராவத் பங்குதாரர் என்று சௌமையா கூறியிருந்தார். இந்த தொழிலில் அவருக்கு பெரிய முதலீடு உள்ளது. சஞ்சய் ராவுத்தின் மகள்கள் மற்றும் மனைவி இருவரும் நிறுவனத்தில் இயக்குநர்கள் பதவியில் உள்ளனர். மது வணிகத்தில் அதிக முதலீடு இருப்பதால், மால்கள் மற்றும் மளிகைக் கடைகளில் மது விற்கும் முடிவை சஞ்சய் ராவத் ஆதரிப்பதாக சோமையா குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும், கிரித் சோமையாவின் குற்றச்சாட்டுகளுக்கு ராவுத் கடுமையாக பதிலளித்தார். ராவுத், "கிரித் சோமையாவின் குழந்தைகள் பருப்பு விற்கிறார்களா? அமித்ஷாவின் மகன்கள் வாழைப்பழம் விற்கிறார்களா? பாஜக தலைவர்களின் குழந்தைகள் டான்ஸ் பார்களை திறந்து அமர்ந்திருக்கிறார்களா? எனக்கு மதுபான ஆலை ஏதேனும் இருந்தால், அதை பாஜக தலைவர்கள் கையகப்படுத்தி நடத்த வேண்டும். என் மகள்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்தால் என்ன தவறு. எந்த பாஜக தலைவரின் பிள்ளையைப் போல போதைப்பொருள் வியாபாரம் இல்லை” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Petrol Price Hike: மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..! அலரும் வாகன ஓட்டிகள்..
Elephant Clash: யானைகள் மோதலில் சிக்கி சென்னை ஐடி பெண் பரிதாப பலி! சுற்றுலா இடத்தில் நேர்ந்த சோகம்!