Bipin Rawat: விடைபெற்றார் நாட்டின் வீர மகன்..பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

Published : Dec 10, 2021, 05:17 PM ISTUpdated : Dec 10, 2021, 05:56 PM IST
Bipin Rawat: விடைபெற்றார் நாட்டின் வீர மகன்..பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

சுருக்கம்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் உடல்கள் ராணுவ முழு மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யபட்டு,  உடல் தகனம் செய்யப்பட்டது  

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் உடல்கள் ராணுவ முழு மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யபட்டு,  உடல் தகனம் செய்யப்பட்டது . குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் வழியாக டெல்லி கொண்டுசெல்லப்பட்டது. முன்னதாக டெல்லி விமானபடை தளத்தில் இருந்து பிபின் ராவத், அவரது மனைவி  மதுலிகா ஆகியோரின் உடல்கள் இராணுவ வாகனத்தில் அவர்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. 

வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவர்களது உடலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர், இராணுவ தளபதி நரவானே , திமுக எம்.பி கனிமொழி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிபின் ராவத், மதுலிகா ஆகியோர் உடலுக்கு அவர்களது மகள்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

இன்று  உடல்கள் அடக்கம் செய்வதற்கு, இராணுவ வாகனத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தேசியக்கொடி ஏந்தி ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தில் வழிநெடுகிலும் மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மயானத்தில் அவர்களது உடலுக்கு பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  முப்படை இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி அகியோரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் உயிரிழந்த ஜெனரல் பிபின் ராவத் உடலுக்கு இசை அஞ்சலி, இதய அஞ்சலி, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லி முதலமைச்சர் ஆரவிந்த் கெஜ்ரிவால், உத்ரகாண்ட முதலமைச்சர் புஷ்கர் சிங், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்,அரசியல் கட்சி தலைவர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உடல்களுக்கு இறுதி சடங்குகளை அவர்களது மகள்கள் செய்தனர். இறுதி சடங்கிற்கு பிறகு, அவர்களது உடலுக்கு மகள்கள் தீமுட்டினர். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் உடல்கள் ராணுவ முழு மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள்  இறுதி மரியாதை செய்யப்பட்டது .

PREV
click me!

Recommended Stories

ரத்தக் களறியான காதல் திருமணம்.. சண்டையில் மணமகனின் மூக்கை அறுத்த பெண் வீட்டார்!
Ola–Uber-க்கு டஃப் போட்டி.. மத்திய அரசின் பாரத் டாக்ஸி.. பயணிகளுக்கு குறைந்த கட்டணம்!