அடிச்சுப் புடிச்சு ஜெயிச்ச ஜேடியு.. வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

Published : Nov 14, 2025, 06:12 PM IST
Radha Charan Sah Wins Sandesh Seat by Just 27 Votes

சுருக்கம்

பீகார் மாநிலத்தின் சந்தேஷ் தொகுதியில் தேர்தல் முடிவுகள் கடும் இழுபறிக்குப் பின் வெளியாகியுள்ளன. ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் ராதா சரண் சா, ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் தீபு சிங்கை வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

பீகார் மாநிலத்தின் 192-சந்தேஷ் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் கடும் இழுபறிக்குப் பின்னர் வெளியாகியுள்ளன. அனைத்து 28 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில், இத்தொகுதியின் வெற்றி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணியின் வேட்பாளரான ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராதா சரண் சா வெற்றி பெற்றுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) வேட்பாளர் தீபு சிங் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

 

 

27 வாக்குகள் வித்தியாசம்

ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ராதா சரண் சா மொத்தம் 80 ஆயிரத்து 598 வாக்குகள் பெற்றார். 43.99% வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர் தீபு சிங் மொத்தம் 80,571 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவர் பெற்ற வாக்குகள் 43.97%. 

இருவருக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 0.02 சதவீதம் மட்டுமே. இதன்படி, ராதா சரண் சா வெறும் 27 வாக்குகள் என்ற மிகச் சிறிய வித்தியாசத்தில் வெற்றியை தன்வசமாக்கி இருக்கிறார்.

0.02% சதவீதம் வாக்கு வித்தியாசம் இந்த சந்தேஷ் தொகுதியின் வெற்றியை மாற்றி அமைத்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!