ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!

Published : Dec 22, 2025, 10:38 PM IST
Bangladesh in Turmoil: Yunus’s Tribute to Radical Leader Sparks Alarm

சுருக்கம்

வங்கதேசத்திற்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பத்திரிகையாளர்கள், ஒரு சில தொழிலதிபர்கள் மட்டுமே வருகை தருகின்றனர்.

இந்தியா-வங்கதேச பதட்டங்களுக்கு மத்தியில், வங்கதேச தூதரகம் இந்தியர்களுக்கான விசா சேவைகளை நிறுத்தியுள்ளது. டெல்லியில் தூதரகம், விசா சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை முன்னதாக, வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா சேவைகளை இந்தியா காலவரையின்றி நிறுத்தியது. குல்னா, ராஜ்ஷாஹி, சிட்டகாங்கிலும் விசா சேவைகளை இந்தியா நிறுத்தியது. சிட்டகாங்கில் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. விசா அலுவலகம் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தியா விசா சேவைகளை நிறுத்தி வைத்ததற்கு எதிர்வினையாக வங்கதேசத்தின் இந்த முடிவு பார்க்கப்படுகிறது. ஆனாலும், வங்கதேசத்திற்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பத்திரிகையாளர்கள், ஒரு சில தொழிலதிபர்கள் மட்டுமே வருகை தருகின்றனர். வங்கதேச இளைஞர் தலைவர் ஷெரீப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்திற்குப் பிறகு வெடித்த போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா விசா சேவைகளை நிறுத்த முடிவு செய்திருந்தது. ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான கோஷங்களுடன் வங்கதேசத்தில் வன்முறை போராட்டங்கள் வெடித்தன.

டிசம்பர் 12 அன்று, டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் நடந்த தேர்தல் பேரணியின் போது, ​​முகமூடி அணிந்த ஆசாமிகளால் ஹாதி தலையில் சுடப்பட்டார். ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், வியாழக்கிழமை இறந்தார். ஹாதியின் மரணத்தைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் வன்முறை, தீ வைப்பு மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஹாதியின் இறுதிச் சடங்கின் போது, ​​கூட்டம் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியது. இதற்கிடையில், திங்களன்று, தேசிய குடிமக்கள் கட்சியின் தொழிலாளர் பிரிவின் தலைவரான மொட்டலேப் ஷிக்டர் குல்னாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கட்சி மாணவர் தலைவர் நஹித் இஸ்லாமுக்கு சொந்தமானது. ஷேக் ஹசினா எதிர்ப்பு இயக்கத்தில் நஹித் இஸ்லாம் ஒரு முக்கிய நபராகக் கருதப்படுகிறது. டாக்கா, சிட்டகாங்கிற்குப் பிறகு பங்களாதேஷின் மூன்றாவது பெரிய நகரம் குல்னா.

பங்களாதேஷின் வெளியுறவு ஆலோசகர் தௌஹித் உசேன் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள பங்களாதேஷ் தூதரக ஆணையர் ரியாஸ் ஹமீதுல்லாவுக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக தெரிவித்தார். சனிக்கிழமை டெல்லியில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்கு வெளியே 20 முதல் 25 பேர் வரை போராட்டம் நடத்தினர்.

ஆனாலும், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். டெல்லியில் உள்ள பங்களாதேஷ் தூதராகத்தின்பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்று அவர் கூறினார். அங்கு போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னையில் விமான சேவை குறைப்பு : பயணிகள் கடும் அவதி! நிலைமை சீரடையுமா?
Instagram Friendship: இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல்.. ஒரே இரவில் மாறிய பெங்களூரு இளம் ஜோடியின் கதை