ராமர் கோவில் திறப்பு விழா.. நுழைவுச்சீட்டில் உள்ள QR Code ஸ்கேன் செய்த பின்னரே அனுமதி - முழு விவரம் இதோ!

Ansgar R |  
Published : Jan 19, 2024, 08:17 PM IST
ராமர் கோவில் திறப்பு விழா.. நுழைவுச்சீட்டில் உள்ள QR Code ஸ்கேன் செய்த பின்னரே அனுமதி - முழு விவரம் இதோ!

சுருக்கம்

Ayodhya Ram Temple : வருகின்ற ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கோலாகலமாக நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது விரைவாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா ஒரு புதிய மற்றும் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. ராமர் கோவிலின் பிரதிஷ்டை விழாவிற்கு அழைக்கப்பட்ட உயரதிகாரிகளுக்கு, ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையால், வழங்கிய நுழைவுச் சீட்டில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்த பின்னரே, கும்பாபிஷேக விழாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அழைப்பிதழ் அட்டை மட்டுமே இந்த நிகழ்விற்குள் நுழைவதற்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்விற்கான நுழைவுச் சீட்டைத் தயாராக வைத்திருப்பதை உறுதிசெய்யுமாறு அறக்கட்டளை பங்கேற்பாளர்களை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளது. 

அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராம்லாலாவின் வாழ்க்கைப் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. கோயில் சடங்கு நிகழ்ச்சிகள் கடந்த ஜனவரி 16 முதல் தொடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சடங்குகள் நாளை மறுநாள் ஜனவரி 21 வரை தொடரும். பகவான் ஸ்ரீ ராம்லாலாவின் பிராண-பிரதிஷ்டா யோகத்திற்கான நல்ல நேரம் பவுஷ் சுக்ல குர்ம் துவாதசி, விக்ரம் சம்வத் 2080, அதாவது திங்கட்கிழமை, ஜனவரி 22, 2024 ஆகும்.

பிறவி கடன், திருமண தடை நீங்கும் தர்மபுரீஸ்வரர் ஆலய சுவாமி வீதியுலா; பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்! விமரிசையாக நடத்தி வைத்த கிராம மக்கள்!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!